home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீ ரங்கநாதர் கோயில்


ஸ்ரீ வியாசராஜ பிரதிஷ்டை செய்த ஹனுமான்

எல்லைக்கரை ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோயில், ஸ்ரீரங்கம், தமிழ்நாடு

ஜீகேகௌசிக்


ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீ ரங்கநாதர் கோயில்

திருச்சி அருகே தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீரங்கம் நூற்று எட்டு திவ்ய தேசங்களில் முதன்மையானது. பன்னிரண்டு ஆள்வார்களில், பதினொரு ஆள்வார்கள் இந்த க்ஷேத்திரத்தின் முதன்மை தெய்வம் ஸ்ரீ ரங்கநாதரைப் புகழ்ந்து பாடியுள்ளனர். ஸ்ரீ ஹரியின் வழிபாட்டாளர்களுக்கு "கோயில்" என்றால் இந்த க்ஷேத்ரம் மட்டுமே. கோவில் வளாகம் ஒரு நகரத்தைப் போலவே பெரியது. மூலவர் சன்னிதியை சுற்றி கோயில் வளாகம் அமைந்துள்ளது, இது இக்கால நகர வடிவமைபாளர்களையும் திகைக்க வைக்கும் விசயம். பிரம்மாண்டமான கோயில் வளாகம் ஒரு கோட்டையை போல் பாதுகாப்பாக அமைந்திருப்பதும் மற்றொரு விசேடம். த்வைத சம்பிரதாயத்திற்கு மையமாக இருக்கின்ற போற்றபடும் "கோயில்" மிக பெரிய வரலாற்றை உடையது.

தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரிய கோயில் தோற்றியதை பற்றிய விவரங்களை விரிவாக "ஸ்ரீரங்க மகாத்மியம்" விவரிக்கிறது. ஸ்ரீரங்கம் கோயில் விமானம் சுயம்புவாக, பிரம்மாவின் தவப் பயனால், திருபாற்கடலில் இருந்து வெளிவந்தது என்கிறது ஸ்ரீரங்க மகாத்மியம். இந்த விமானத்திற்கு நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார் பிரம்மா. சூரியன் பல்லாண்டு காலம் பூஜை செய்து வர, சூரிய குலத்தில் பிறந்த இட்சுவாகு என்ற மன்னன் அயோத்திக்கு இவ்விமானத்தை எடுத்து வந்தான். சூரிய குலம் இட்சுவாகு குலம் என்றும் அழைக்கப்பட்டது. அக்குலத்தில் தோன்றியவர்தான் ஸ்ரீராமன் அவரும் அயோத்தியில் இதனை வழிபட்டு வந்தார். "ரங்கா விமானம்" இட்சுவாகு வம்சத்தால் வழிபாட்டில் இருந்ததால் "குல தனம்" என்று அழைக்கப்பட்டார். தனது பட்டாபிஷேகத்திற்கு பிறகு ராமர் "குலதனத்தை" இலங்கை வேந்தன் விபீஷணனுக்கு அன்பளிப்பாக தருகிறார். விபீஷணன் அதனை அயோத்தியிலிருந்து இலங்கை எடுத்து செல்கையில், காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையிலான தீவின் அழகில் புனிதத்தில் தான் அங்கு நித்திய வாசம் செய்ய முடிவு செய்தார் ஶ்ரீரங்கநாதர். இக்காவிரி கரையில் விபீஷணன் மாலை வந்தனங்களை முடிக்க நினைத்து "ரங்க விமானத்தை" அங்கு இறக்கினான். ஶ்ரீரங்கநாதர் பின் அங்கிருந்து கிளம்பாமல் தான் இங்கு வாஸம் செய்ய விரும்புவதாகவும், தனது கடாக்ஷம் இலங்கைக்கு கிடைக்கும் என்றும் கூறி விபீஷணனுக்கு விடை கொடுத்தார்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாத கோயிலுக்கு பங்களிப்புகள்
தென்னிந்தியாவை ஆண்ட கிட்டத்தட்ட அனைத்து மன்னர்களும் இந்த கோவிலின் வளர்ச்சிக்கு பங்களித்திருந்தனர். தினசரி பூஜைகள் செய்யப்படுவதற்கும், இந்த கோவிலில் நடத்தப்படும் பண்டிகைகளுக்கும் பல கிராமங்கள் வழங்கப்பட்டன. ஶ்ரீ ரங்கநாதருக்கும் நம்பெருமாளுக்கும் [உற்சவர்] பல ஆபரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கோயில் வளாகம் ஒரு நகரமாகவும், நாட்டின் செல்வமிகு கோவில்களில் ஒன்றாக மாறியது.

ஸ்ரீரங்கத்தில் மாலிக் கஃபூர்

கோயில் நகரம் தர்ம வர்மாவின் ஆட்சியில் இருந்த நாட்களிலிருந்தே ஸ்ரீரங்கத்திற்கு ஒரு புகழ்பெற்ற வரலாறு உண்டு. நவீன காலங்களில், மாலிக் கஃபர் நகரைக் கொள்ளையடித்ததையும், டெல்லி சுல்தான்கள் இங்கு வருவதற்கு வழி வகுத்ததையும் மறக்க முடியாது.

1296 முதல் 1316 வரை டெல்லி சுல்தானின் ஆட்சியாளரான அலாவுதீன் கில்ஜியின் இராணுவத்தில் ஜெனரலாக பணியாற்றி வந்த ஒரு மந்திரி அடிமை மாலிக் கஃபூர் (1296-1316). டெல்லி சுல்தானகம் விந்தியா எல்லைக்கு அப்பால் தங்கள் ராஜ்யத்தை விரிவுபடுத்தியதற்கு அவர் பொறுப்பு. அவர் தெற்கின் ஆட்சியாளர்களை டெல்லி சுல்தானின் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது மட்டுமல்லாமல், கோயில்கள், பொதுமக்கள் மற்றும் தெற்கின் ஆட்சியாளர்களின் செல்வங்களை சூறையாடிய ஒரு நபராகவும் இருந்தார். தெற்கின் இந்து கோவில்களை அழிக்கும் அவரது செயல் வரலாற்றில் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அவரது காழ்ப்புணர்ச்சிக்கு விதிவிலக்கல்ல. தெற்கில் தனக்குச் சொந்தமான பிரதேசங்களில் டெல்லி சுல்தானின் பிரதிநிதியை நியமித்த பின்னர், அவர் கொள்ளையோடு டெல்லிக்கு புறப்பட்டார்.

முஸ்லீம் வரலாற்றாசிரியர் ஜியாவுதீன் பரானி கூறுகையில், மாலிக் கபூர் 241 டன் தங்கம், 20000 குதிரைகள் மற்றும் 612 யானைகளுடன் கொள்ளையடிக்கப்பட்ட புதையலுடன் திரும்பி டெல்லிக்குச் சென்றார் என்று பதிவு செய்துள்ளார்.

நம்பெருமாள்

ஸ்ரீ ரங்கநாத சுவாமியின் உற்சவ மூர்த்தி நம்பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். தென்னிந்தியா மாலிக் கஃபூரின் படையெடுப்பின் போது, ​​ஸ்ரீ ரங்கநாதரின் பக்தர்கள் மூலவர் முன் சுவர் எழுப்பி வேறு ஆலயத்தை உருவாக்கி, நம்பெருமாளை ஒரு பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றனர். நம்பெருமாள் பாதுகாப்பான பகுதிகள் வழியாக ஒளிந்து கொள்ள வேண்டியிருந்தது, ஆனால் அவருடன் வந்த பக்தர்கள் இந்த பயணத்தின் போது அனைத்து பூஜைகளையும் செய்திருந்தனர். 1322 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீரங்கத்தில் உள்ள மூலவரிடம் இருந்து விலகிய நம்பெருமாள், விஜயநகர் ஆட்சியின் கீழ் ஸ்ரீரங்கத்திற்கு அமைதி திரும்பிய பின்னர் 1371 ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கம் திரும்பினார்.

விஜயநகர சம்ராஜ்யம்

1336 ஆம் ஆண்டில் முதலாம் ஹரிஹரா மற்றும் அவரது சகோதரர் முதலாம் புக்கா ராயா ஆகியோரால் தென்னிந்தியாவின் டெக்கான் பீடபூமி பகுதியை தளமாக கொண்டு விஜயநகர சாம்ராஜ்யம் நிறுவப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இஸ்லாமிய படையெடுப்புகளைத் தடுக்க தெற்கின் சக்தியாக்க மேற்கொண்ட முயற்சிகளின் உச்சக்கட்டமாக இப்பேரரசு முக்கியத்துவம் பெற்றது. ஹரிஹரா மற்றும் புக்கா ஆகியோரால் நிறுவப்பட்ட பேரரசு தென்னிந்தியாவின் முஸ்லீம் படையெடுப்பை எதிர்த்துப் போராடுவதற்காக சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரியார் ஸ்ரீ வித்யாரண்யார் வழிகாட்டியதின் படி நிறுவப்பட்டது என்பது குறிபிடத்தக்கது. இந்த வம்சம் சங்கம வம்சம் என்று அழைக்கப்பட்டது. அவர்கள் முழு தென்னிந்தியாவையும் கைப்பற்றி, அவர்கள் சார்பாக ஆட்சி செய்ய "மண்டலேஸ்வரர்" என்று அழைக்கப்படும் தங்கள் பிரதிநிதியை நியமித்தனர்.

பேரரசால் நியமிக்கப்பட்ட அனைத்து மண்டலேஸ்வரர்களும் கோயில்களை மீட்டெடுத்து, சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களிடையே ஒற்றுமையை மீண்டும் வளர்த்துக் கொண்டிருந்தனர்.

அரசியல் காட்சி மாற்றம்

1485 ஆம் ஆண்டு மண்டலேஸ்வரர்களில் ஒருவரான சாளுவ நரசிம்ம தேவ ராயா என்பவரால் சங்கம வம்ச பேரரசரிடம் இருந்து பேரரசின் சக்தி கைப்பற்றப்பட்டது. 1486 ஆம் ஆண்டில் அவர் தன்னை பேரரசராக அறிவித்தார், விஜயநகர சாம்ராஜ்யம் புதிய சாளுவ வம்சத்தின் கீழ் செயல்ப்பட்டது.

தமிழ்நாட்டின் கோனேரிராயன்

ஒரு மண்டலேஸ்வர் சாம்ராட்டாக [மாமன்னர்] மாறியதைக் கண்டதும், அதுவரை விஜயநகர் சாம்ராஜ்யத்திற்கு விசுவாசமாக இருந்த பல மண்டலேஸ்வர்கள் சுயாதீனம் அறிவித்து, தங்கள் சொந்த பிரதேசத்தை ஆளத் தொடங்கினர். அவற்றில் குறிப்பிடத்தக்கவர் தமிழ்நாடு பிராந்தியத்தில் உள்ள கோனேரிராயன் மற்றும் மாவலி வானாதிராயன் ஆவர்.

கோனேரிராயன் ஆட்சிப் பகுதி வடக்கே காஞ்சிபுரத்திலிருந்து தெற்கே திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் உட்பட்ட பகுதிகள் அடங்கியிருந்தன. பொ.ஆ. 1471இல் கோனேரிராயன் திருச்சிராப்பள்ளி பிராந்திய தலைவரானார். இவரது தலைநகர் காஞ்சிபுரமாகும். ஸ்ரீரங்கம் கோனேராயன் ஆட்சியின் கீழ் இருந்தது, அவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள இந்த கோயிலுக்கும், திருப்பதியில் உள்ள கோயிலுக்கும் பல பங்களிப்புகளைச் செய்திருந்தார். அவர் ஒரு சிவ பக்தர் என்றாலும் அவருக்கு வைணவத்திலும் அன்பு இருந்தது.

கட்டாய அரசியல் காரணங்கள் மற்றும் சங்கம வம்சத்திலிருந்து சாளுவ பின் துளுவ வம்சத்திற்கு விஜயநகரில் ஆட்சி பொறுப்பு மாற்றப்பட்டதன் காரணமாக, அப்போதைய பேரரசர் துளுவ நரச நாயக்கார் 1496 ஆம் ஆண்டில் கோனேரிராயனுக்கு எதிராகப் போரிட்டார், நரச நாயக்கர் ஸ்ரீரங்கத்தை கைப்பற்றினார்.

நரச நாயக்காவின் மூத்த சகோதரர் கந்தாடை ராமானுஜர், பைராஹி துறவி ஸ்ரீரங்கத்தில் இருந்தார். கோனேரிராயனின் கட்டுப்பாட்டில் இருந்த விவகாரங்களில் தலையிடுமாறு அவர் தனது சகோதரர் நரச நாயகரிடம் கேட்டார். கோயிலின் நிர்வாகத்தில் தலையிட அவரது அழைப்பின் பேரில், விஜயநகர சக்கரவர்த்தியின் காரியக்கார்தா நரச நாயக்கா, கோனேரிராயன் பிரதேசத்தை ஆக்கிரமித்து வென்றார்.

ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைகா தகராறு

அகிலாண்டேஸ்வரி அம்மன், திருவானைகாவில் வருடாந்திர பிரம்மோத்ஸவத்தின் போது, ​​ஸ்ரீ ரங்கநாதரின் உற்சவ மூர்த்தி நம்பெருமாள் திருவானைகாவில் உள்ள அவரது சகோதரி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளைப் பார்க்க செல்வார், திருவானைகாவின் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள மண்டபத்தில் இருந்துவிட்டு ஸ்ரீரங்கத்திற்குத் திரும்புவார். நீண்ட நாட்களாக பழக்கத்தில் உள்ளது இது.

மாலிக் கஃபூர் படையெடுப்பின் போது பெருமாள் கோயிலிலிருந்து விலகி இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்ரீ ரங்கநாத உற்சவர் (நம் பெருமாள்) 1371 ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கத்திற்குத் திரும்பினார். கிட்டத்தட்ட தொண்ணூறு ஆண்டுகள் இல்லாத நிலையில், திருவானைகாவுக்கு நம்பெருமாள் வருகை தரும் நடைமுறை மீண்டும் புதிப்பிக்க வேண்டும், ஆனால் இந்த நடைமுறைக்கு சிலரின் எதிர்ப்பு இருந்தது. அப்போதிருந்து ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைகா இடையே அதிகார வரம்பு தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது.

மத்தியஸ்த முயற்சிகள் இருந்தபோதிலும் சர்ச்சை தொடர்ந்தது ...

ஸ்ரீ வியாசராஜா

ஸ்ரீ வியாசராஜா அந்தக் காலத்தில் ஒரு சிறந்த துறவி மற்றும் ஸ்ரீ மத்வாச்சார்யாவின் த்வைத தத்துவத்தைப் பின்பற்றுபவர். விஜயநகரத்தின் சாளுவ மற்றும் துளுவ வம்சம் இரண்டிற்கும் அவர் ராஜகுரு ஆவார். மாலிக் கஃபூரின் படையெடுப்பின் போது அழிக்கப்பட்ட பல கோயில்களை புதுப்பிக்க பட்டதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். ஸ்ரீ அனுமாரின் சிறந்த பக்தராக இருந்த அவர், ஸ்ரீ ஆஞ்சநேயருக்காக பல கோயில்களைக் கட்டியிருந்தார்.

அவரைப் பற்றி எங்கள் தளத்தில் "ஸ்ரீ ஹனுமத் பக்தர்கள் - ஸ்ரீ வியாசராஜா”வை பார்க்கவும்.

தொடர்ந்த சர்ச்சை - தீர்க்கப்பட்டதா?

ஸ்ரீ வியாசராஜா விஜயநகர சாம்ராஜ்யத்தின் ராஜகுருவாக இருந்தார், ஸ்ரீரங்கத்திற்கு விஜயம் செய்தார். அத்தகைய விஜயத்தின் போது ஸ்ரீரங்கத்திற்கும் திருவானைக்காவுக்கும் இடையிலான எல்லை தகராறு அவரது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. மீண்டும் மீண்டும் வளர்ந்து வரும் இந்த மோசமான பிரச்சினைக்கு அவர் ஒரு தீர்வை வழங்கினார். ஸ்ரீ ரங்கநாதரின் பிரதான கர்ப கிரஹத்திலிருந்து நான்கு திசைகளிலும் தனது மூச்சைப் பிடித்துக் கொண்டு நடப்பதாகவும், அவர் எங்கு திரும்ப சுவாசிக்க ஆரம்பிக்கிறாரோ அந்த இடம் ஸ்ரீரங்கத்தின் எல்லையாக குறிக்கப்படும் என்றார்.

சொன்னது போல் அவர் நான்கு திசையிலும் நடந்து ஸ்ரீரங்கத்தின் எல்லையை தீர்மானித்தார்.

எல்லைக்கரை - ஶ்ரீரங்கம் எல்லை

கிராமங்களின் எல்லையை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஒரு கோவில் கட்டி குறிப்பது விஜயநகரத்தின் வழக்கம். ஸ்ரீ ஹனுமனின் பக்தரான ஸ்ரீ வியாசராஜா விதிவிலக்கல்லாமல், ஸ்ரீரங்கத்தின் எல்லையாகக் குறிக்கப்பட்ட நான்கு இடங்களில் நான்கு அனுமன் கோயில்களைக் கட்டியிருந்தார். இன்று அவற்றில் மூன்று உள்ளன மற்றும் எல்லைக்கரை மண்டபத்தில் ஒன்று காலப்போக்கில் அகற்றப்பட்டது.

எல்லைக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில், ஸ்ரீரங்கம், தமிழ்நாடு வருடாந்திர பங்குனித் திருவிழாவில் எட்டாம் நாளில் நம்பெருமாள் கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள ஸ்ரீரங்கத்தின் எல்லைக்கரை மண்டபத்தில் எழுந்தருளுவார். இது ஸ்ரீ ரங்கநாத கோயிலின் வடகிழக்கு. இந்த எல்லைக்கரையில் ஒரு மண்டபம் உள்ளது, ஸ்ரீ ரங்கநாதர் எட்டாம் நாளில் இங்கு ஒரு பல்லக்கில் வந்து கொள்ளிடம் நதி வழியாக குதிரையேற்றம் [குதிரை] வாகனத்தில் தனது கோவிலுக்குத் திரும்புகிறார். இந்த இடத்தில் உள்ள மண்டபம் “எல்லைக்கரை மண்டபம்” என்று அழைக்கப்படுகிறது. மேற்கண்ட பத்திகளில் குறிப்பிட்டுள்ளபடி இது திருவனைகாவிற்குள் செல்லாமலே வந்து விடுவார்.

தற்சமயம் அருகிலே ஸ்ரீ ஹனுமனுக்கான கோயில் ஏதும் இல்லை.

முதல் அனுமன் கோயில் ரயில்வே ஓவர் பிரிட்ஜுக்கு அருகிலுள்ள சீனிவாச நகரில் உள்ளது. இது ஸ்ரீ ரங்கநாத கோயிலின் தென்கிழக்கு. இரண்டாவதாக ஸ்ரீ ரங்கநாத கோயிலுக்கு தெற்கே உள்ள அம்மா மண்டபம் சாலையில் காவரி ஆற்றின் கரையில் உள்ளது. மூன்றாவது ஸ்ரீ ரங்கநாத கோயிலின் வடமேற்கில் உள்ள ஸ்ரீரங்கத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேலூர் சாலையில் உள்ளது.

இந்த இடங்கள் ஒரு காலத்தில் ஸ்ரீரங்கம் நகரத்தின் எல்லை நிர்ணயம் செய்ய பயன்படுத்தப்பட்டன என்பதைக் குறிக்கும் “எல்லைக்கரை” என்ற முன்னொட்டுடன் தற்போது அறியப்பட்ட இரண்டு இடங்கள் உள்ளன. முதலாவது எல்லைக்கரை மண்டபம், இரண்டாவது சீனிவாச நகரில் உள்ள எல்லைக்கரை அஞ்சநேய கோயில்.

எல்லைக்கரை ஆஞ்சநேயர் கோயில்

ரயில்வே ஓவர் பிரிட்ஜுக்கு அருகிலுள்ள சீனிவாச நகரில் உள்ள கோயில், எல்லைக்கரை ஆஞ்சநேயர் கோயில் என்று அழைக்கப்படுகிறது, இது ஸ்ரீரங்கத்தின் ஸ்ரீ வியாசராஜ மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது ஸ்ரீ ரங்கநாத கோயிலின் தென்கிழக்கில் அமைந்துள்ளது.

இது மேற்கு நோக்கிய சிறிய கோயில். கோயில் என்பது கர்பகிரஹத்தை மட்டும் கொண்டு உள்ளது. கர்பகிரகத்தின் மேல் கும்பத்துடன் நன்கு அலங்கரிக்கப்பட்ட விமானம் உள்ளது.

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த எல்லைக்கரை ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி விக்ரஹம் சுமார் இரண்டு அடி உயரம் கடினமான கிரானைட் கல்லால் ஆனது. அவர் சிலை "அர்த்த சிலை” வகையை சேர்ந்தது. இறைவன் தெற்கு நோக்கி நடந்து செல்வது போல் காணப்படுகிறார். நூபுரம் தண்டை அணிந்த இறைவனது இடது தாமரை திருப்பாதம் முன்னால் உள்ளது. அவரது வலது தாமரை திருபாதம் தரையில் இருந்து சற்று உயர்ந்து காணப்படுகிறது. கங்கணம் அலங்கரிக்கும் அவரது இடது திருக்கரம் இடுப்பின் இடபுறம் ஊற்றியுள்ளார். அக்திருகரத்தில் சௌகந்திகா மலரின் தண்டினையும் பிடித்துள்ளார். பாதி மலர்ந்த நிலையில் இருக்கும் மலர் அவரது இடது தோள்பட்டைக்கு மேலே காணப்படுகிறது. அவர் தனது மார்பில் ஆபரணங்களை அலங்காரமாக அணிந்துள்ளார். அவருடைய மற்றொரு கையால் "அபய முத்திரை"யால் அவர் தனது பக்தர்களுக்கு ஆசீர்வாதம் அளிக்கிறார். இறைவனின் வால் அவரது தலைக்கு மேலே சென்று ஒரு வளைவுடன் முடிகிறது, முடிவில் ஒரு சிறிய அழகான மணி அலங்கரிக்கிறது. இறைவன் தன் தோள்களைத் தொடும் குண்டலங்கள் அணிந்துள்ளார். அவருடைய கேசம் அழகாக பிணைக்கப்பட்டு குடுமியாக கட்டி வைத்துள்ளார். ஒளிரும் அவரது கண்கள் பக்தர் மீது கருணையை பொழிகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     " எல்லைக்கரை ஆஞ்சநேயர் கோயில், ஸ்ரீரங்கம்"

 

அனுபவம்
பிரகாசமான ஒளிரும் கண்களுடன் உள்ள க்ஷேத்திரத்தின் இறைவன் ஆஞ்சநேயர் தியானிக்க பட வேண்டியவர். இந்த க்ஷேத்திரத்தில் அவருடைய இருப்பை உணர முடியும், அது மிகவும் சக்தி வாய்ந்தது, இங்கு தியானிக்கும்போது அமைதி உங்கள் மீது படர்வதை உணர முடியும்.

தமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: ஆகஸ்ட் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+