home-vayusutha:
  • கோவில்கள்
  • ஸ்லோகம் | துதி | ஸ்துதி
    • ஸ்லோகம்
    • துதிகள்: தமிழ்
    • ஸ்துதி: பிற மொழி
  • கட்டுரைகள்
  • மற்றவை
    • பலகை
    • எங்கள் இணையம் பற்றி
    • வெளியீடு இணையம்
    • ஆங்கில இணையம்
    • ஹிந்தி இணையம்
    • Site-map
  • பின்னூட்டம்
ஆஞ்சநேயருக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதமான பழமையான திருதலங்கள் செல்வோம். ஒவ்வொரு கோயிலும் வரலாற்றின் தனித்துவமான கதையையும் அனுபவத்தையும் சொல்கிறது. 200க்கும் மேற்பட்ட தொன்மைமிகு கோயில்கள், அனைத்தும் நமது பக்தியையும், ஆன்மீகத்தையும் ஊக்குவிக்கின்றன.
26 ஆண்டு காலமாக அனுமன் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்
26 ஆண்டு காலமாக அனுமன் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்
26 ஆண்டு காலமாக அனுமன் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்
26 ஆண்டு காலமாக அனுமன் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்

 

ஸ்ரீ காரஞ்ச நரசிம்மர் திருக்கோயில், அஹோபிலம், கர்நூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்

ஸ்ரீ கரஞ்ச ஆஞ்சநேயர், அஹோபிலம், கர்நூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்

ஜீ.கே.கௌசிக்



அஹோபிலம்

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் அஹோபிலம் அமைந்துள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையின் கருடாத்திரி எனும் மலையில் இது அமைந்துள்ளது. இது சென்னைக்கு சுமார் 400 கி.மீ. வடமேற்காக இது அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள இந்த ஒன்பது நரசிம்மர் கோயில்களுக்கு இந்த இடம் புகழ் பெற்றுள்ளது. அஹோபிலம் இரண்டு பகுதிகளிலும் அறியப்படுகிறது. மலையின் கீழிருக்கும் பள்ளத்தாக்கு திகுவு அஹோபிலம் என்றும் லோயர் அஹோபிலம் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு ஸ்ரீ பிரஹலாத வரதன் கோயில் (நரசிம்மருக்கு மற்றொரு பெயர்) அமைந்துள்ளது. இரண்டாம் பாகம் எகுவூ அஹோபிலம் அல்லது மேல் அஹோபிலம் என்று அழைக்கப்படுகிறது, அங்கு நரசிம்மரின் ஒன்பது கோவில்கள் அமைந்துள்ளன. கீழ் அஹோபிலம் சாலையில் எளிதில் அடையலாம், மேல் அஹோபிலம் கருடாத்திரி மலைத்தொடரில் உள்ளது. கடினமான நிலப்பரப்பு, மலையேற்றத்தால் மட்டுமே இக்கோயில்களை பார்க்கமுடியும்.

அஹோபிலம் முக்கியத்துவம்

அஹோபிலம் கிழக்குப் பகுதியின் ஒரு பகுதியாகும். கிழக்கத்திய மலைத்தொடர், பெரிய ஆரிய ஸ்ரீ ஆதிசேஷவின் அழகிய தெய்வம், திருமலையில் உள்ள அதன் ஹூட், அஹோபிலம் மற்றும் அதன் வால் பகுதியிலுள்ள ஸ்ரீசைலம் ஆகியவற்றின் அழகிய தெய்வம் என்று நம்பப்படுகிறது. எனவே, இந்த மூன்று இடங்களும் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன. திருமலாவில் ஸ்ரீ வணக்கதேசத்தில் வசித்து வருபவர் அஹோபிலம், நவர நரசிம்மர் மற்றும் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூனாவில் உள்ளார்.

அஹோபிலம்: பெயர்

அஹோபிலம் நாவ நரசிம்மர் க்ஷேத்திரங்கள் - வரை படம் நரசிம்மாவதாரத்தில் மிகவும் கடுமையான கோபத்தில் இருந்த விஷ்ணு அரக்கன் ஹிரண்யகசுவை வதம் செய்ததை கண்ட தேவர்கள் "ஆ! என்ன வலிமை" ["அஹோ! பலம்" என்பது சம்ஸ்கிருதம்] என்று ஆச்சரியப்பட்டார்கள். அதனால் அஹாபலம் எனப்படுகிறது. மாறாக, கருடர் விஷ்ணுவை குறித்து குகையில் தவமிருந்து விஷ்ணுவின் ஆசி பெற்றார் என்பதால் அஹோபிலம் [இங்கே பிலம் என்பது பள்ளம்/குகை என்பதை கூறுவது].

அஹோபிலம் நாவ நரசிம்மர் க்ஷேத்திரங்கள்

அஹோபிலத்தில் ஒன்பது க்ஷேத்திரங்களில் சுவாமி நரசிம்மர் பக்தர்களுக்கு ஒன்பது திருக்கோலங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஒன்பது நரசிம்ஹ ஸ்தலங்களில் அருள் பாலிக்கும் ஶ்ரீநரசிம்மர்கள் : - 1. ஜுவாலா நரசிம்மர் 2. அஹோபில நரசிம்மர் 3. மாலோல நரசிம்மர் 4. வராக [குரோடா] நரசிம்மர் 5. காரஞ்ச நரசிம்மர் 6. பார்கவ நரசிம்மர் 7. யோகநந்த நரசிம்மர் 8. சித்ரவடு நரசிம்மர் மற்றும் 9. பாவன நரசிம்மர்.

ஸ்ரீ காரஞ்ச நரசிம்மர் க்ஷேத்திரம்

ஸ்ரீ காரஞ்ச நரசிம்மர், அஹோபிலம் ஸ்ரீ காரஞ்ச நரசிம்மர் கோவில் ஐந்தாவது க்ஷேத்திரமாகக் காணப்படுகிறது, இது பல வழிகளில் தனித்துவமானது. கீழ் அஹோபிலத்திலிருந்து மேல் அஹோபிலம் நோக்கி பயணிக்கும்போது, ஸ்ரீ காரஞ்ச நரசிம்மர் அருள்பாலிக்கும் க்ஷேத்திரம் வரும். மேல் அகோபிலத்திலிருந்து சுமார் ஓர் கிலோமீட்டர் தொலைவிலும், கீழ் அகோபிலத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த இடம் 'கரஞ்ச' என்றும் ’காரஞ்ச’ என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இங்கு புங்கை மரம் காடாக இருந்தது. புங்கை (ஹொங்கே) மரம் சம்ஸ்கிரத்தில் ’கரஞ்ச’ என்றும் தெலுங்கு மொழியில் 'புங்கு' என்ற பெயரிலும் தமிழ் மொழியில் 'புங்கை' என்ற பெயரிலும் அறியப்படுகிறது. 'கரஞ்ச விருக்ஷம்' என்றழைக்கப்படும் இந்த மரங்கள் காடாக இருந்த இடத்தில் இருக்கும் ஶ்ரீநரசிம்மருக்கு ’கரஞ்ச/காரஞ்ச நரசிம்மர்’ என்ற திருநாமம். கருடார்த்தி மலை தொடரை அழகிய பின்னணியாக கொண்டு இங்கு கோயில் அமைந்துள்ளது. இது பாபநாசினி நதிக்கரையில், இயற்கையின் மத்தியில் அமைந்துள்ளது இக்கோயிலுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது மற்றும் பக்தர்களின் மனதை அமைதிப்படுத்துகிறது.

ஸ்ரீ கரஞ்ச நரசிம்மர்

புராண காலத்தில் ஸ்ரீ துர்வாஸ் ரிஷியால் சபிக்கப்பட்ட ஶ்ரீகபில ரிஷி ஶ்ரீ கரஞ்ச நரசிம்மரை துதித்து, தியானித்து சாப விமோசனம் பெற்றார். ஸ்ரீ நரசிம்மர் இந்த க்ஷேத்திரத்தில் மிகவும் அபூர்வமாகவும் வித்யாசமாகவும் காட்சி தருகிறார். இறைவன் பத்மாசனத்தில் 'புங்கை' மரத்தின் கீழ் 'சதுர் புஜார்' [நான்கு திருகரங்கள்] கொண்டு, இடது மேல் திருகையில் பொதுவாக ராமரிடம் காணப்படும் வில் அம்புடன் காட்சி தருகிறார். வலது மேல் திருகையில் 'ஸ்ரீ சுதர்சனம்' உள்ளது, கீழ் வல திருகரம் ’அபய' முத்திரை காட்டுயும், சிம்ம முகம் மூன்று கண்களுடன் நரசிம்மராகவும், ஒற்றைத்தலை நாகம் குடைப் பிடிக்க விஷ்ணு ரூபராகவும் ஒரே சமயத்தில் திருவருள் புரிகிறார் காரஞ்ச நரசிம்மர்.

ஸ்ரீ நரசிம்மரை அந்தத் திருவுருவத்தில் இதுவரை தரிசித்திராத ஸ்ரீ ஆஞ்சநேயர், அவரைத் தரிசிக்கும் நோக்கில் இங்கு தவம் புரிந்தார். விஷ்ணுவின் அனைத்து வடிவங்களிலும் ஸ்ரீ ராமரையே காண விரும்பிய ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, இத்தலத்தில் ஸ்ரீ நரசிம்மர், நரசிம்மராகவும் அதே சமயம் ஸ்ரீ ராமராகவும் இணைந்த ஒரு தனித்துவமான வடிவத்தில் காட்சி அளித்தார்.

ஒரே சமயத்தில் நரசிம்மராகவும், ராமராகவும் தோன்றம் கொண்டுள்ள இந்த வடிவத்தை எடுத்தது ஶ்ரீ ஆஞ்சனேயருக்கு தரிசனம் கொடுக்கத்தான் என்பது சுவாரஸ்யமான விஷயம்.

ஸ்ரீ கரஞ்சா ஆஞ்சநேய சன்னதி

ஸ்ரீ காரஞ்ச நரசிம்மர் திருக்கோயில், அஹோபிலம் ஸ்ரீ நரசிம்மரின் சன்னதி பவநாசினி நதியை கரையில், கருடாத்திரி மலைத்தொடரை பின்னனியாக கொண்டு அமைந்துள்ளது. ஶ்ரீநரசிம்மர் சன்னிதிக்கு எதிரில் கருடாள்வார் சன்னிதி உள்ளது. ஸ்ரீ கருடாள்வரை பிரார்த்தனை செய்த பிறகு, இடது பக்கத்தில் மற்றொரு சன்னதியை காணலாம். இந்த சன்னதியில் ஸ்ரீ ஆஞ்சநேயர் தரிசனம் கொடுக்கிறார். இந்த கோயிலின் ஸ்ரீ ஆஞ்சநேயர் கரஞ்சா ஆஞ்சனேயர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். நரசிம்மரின் தரிசனத்தைக் காண ஸ்ரீ ஆஞ்சநேயர் இங்கு தவம் செய்தார். விஷ்ணுவின் ஒவ்வொரு உருவிலும் ஶ்ரீ ராமரையே காண விரும்புவார் என்பதால் ஶ்ரீ விஷ்ணு இங்கு நரசிம்மராகவும், அதே சமயத்தில் ஶ்ரீராமராகவும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தரிசனம் கொடுத்தார். ஶ்ரீஆஞ்சநேயரின் ஆசியால் நமக்கும் ஶ்ரீ நரசிம்மரின் இப்படிப்பட்ட வடிவில் தரிசனம் இந்த க்ஷேத்திரத்தில் கிடைக்கிறது.

ஸ்ரீ கரஞ்சா ஆஞ்சநேயர்

இந்த திருக்கோயிலில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கரஞ்சா ஸ்ரீ நரசிம்மரை கூப்பிய திருகரங்களுடன் தரிசிச்ச வண்ணமுள்ளார். ஶ்ரீஆஞ்சநேயரின் இரு புறமும் சங்கும் சக்கரமும் காணப்படுகிறது. ஶ்ரீராமர் ஶ்ரீஆஞ்சநேயரை தழுவிய போது ஏற்பட்ட தழும்பு இது. அவருடைய கண்கள் இரண்டிலும் தெரியும் பிரகாசம் நம்மை ஆகர்ஷிக்கிறது. ஶ்ரீநரசிம்மரில் ஶ்ரீராமரை கண்ட கண்கள் அல்லவா? பிரகாசிக்காமல் எப்படியிருக்கும். தண்டைகள் அணிந்துள்ள அவரது திருபாதங்கள் ஶ்ரீகரஞ்சா நரசிம்மரை நோக்கி செல்வது போல் இருக்கிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     " ஸ்ரீ கரஞ்ச ஆஞ்சநேயர் கோவில், அஹோபிலம் "

 

அனுபவம்

ஶ்ரீகரஞ்சா ஆஞ்சநேயரின் அருளால் மிகவும் தனித்துவம் வாய்ந்த கரஞ்சா ஸ்ரீ நரசிம்மரின் தரிசனம் நமக்கு கிடைத்துள்ளது, அவ்வாஞ்சநேயரை தரிசித்து ஆசிகள் பல வாருங்கள்.

தமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: பிப்ரவரி 2019
திருத்தப்பட்ட பதிப்பு: ஜூலை 2026



தாங்கள் கருத்துகளை விருந்தினர் ஏட்டில் பதிவு செய்யவும்      Image


ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க


காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே

Image

Copyright ©. All Rights Reserved. — Designed with love by Untree.co — Distributed By ThemeWagon

Modified by : Aparna :: mail- vayusutha@yahoo.co.in