home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ லட்சுமி மோனோஹர தீர்த்தர் பிரதிஷ்டித்த ஹனுமான் - 300 ஆண்டுகள் பழமையானது

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி, ஸ்ரீபாதராஜ மடம், நவபிருந்தாவனம், ஈரோடு, தமிழ்நாடு

ஸ்ரீ ஹரி சுந்தர்

ஸ்ரீபாதராஜ மடம், பஜார் வீதி, முல்பாகல், கோலார்

ஈரோடு

ஈரோடு சந்திப்பு ரயில் நிலையம்- உபயம்:விக்கி காமன்ஸ் ஈரோடு இன்று ஒரு மாவட்ட தலைமையகமாக உள்ளது, இது கி.பி 850 ஆம் ஆண்டு முதல் சாளுக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக முக்கிய நகரமாக இருந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக, ஈரோடு பல்வேறு ஆட்சியாளர்களின் கீழ் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டுள்ளது.

பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஈரோடு விஜயநகர ஆட்சியின் கீழ் இருந்தது, பின்னர் மதுரை நாயக்கர்கள், பதினெட்டாம் நூற்றாண்டில் ஹைதர் மற்றும் திப்பு, இறுதியில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். வா.உ.சி. பூங்காவில் உள்ள 1628 ஆம் ஆண்டு கல்வெட்டு, சந்திரமதி முதலியார் ஒரு 'சத்திரம்' கட்டுவதற்கு நிலத்தை நன்கொடையாக வழங்கியதாகக் கூறுகிறது, இது அவர் எந்த மன்னரின் அதிகாரத்தின் கீழும் இல்லாத ஒரு சுதந்திர ஆட்சியாளராக இருந்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

விஜயநகர சாம்ராஜ்ஜியம் மற்றும் ஸ்ரீ மத்வாச்சாரியார்

விஜயநகரப் பேரரசின் செல்வாக்கு, அவர்களின் ஆட்சியின் கீழ் நீண்ட காலம் இருந்ததால், ஈரோட்டின் மீது ஆழமான கலாச்சார தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த செல்வாக்கு கொங்குநாடு பகுதி வரை பரவியது. கொங்குநாடு பகுதி பெரும்பாலும் விஜயநகர அல்லது அதன் பிரதிநிதிகளுக்கு உட்ப்பட்ட பகுதியாக இருந்தது.

இந்த காலகட்டத்தில், ஸ்ரீ மத்வாச்சாரியாரின் தத்துவத்தை கடைபிடித்த அறிஞர்கள் மற்றும் துறவிகள் இந்த பகுதிகளில் அவரது 'த்வைத' போதனைகளை விரிவாகப் பரப்பினர். இதன் விளைவாக, ஈரோட்டில் மத்வ மடங்களின் பல கிளைகளுடனும், 'த்வைத' சித்தாந்தத்தினை பின்பற்றுவர்களுடனும் செழித்து இருந்தது,இவர்களால் ஸ்ரீ முக்யபிராணராக ஸ்ரீ ஆஞ்சநேயர் போற்றப்பட்டார்.

ஸ்ரீ வியாசராஜரால் ஈர்க்கப்பட்ட ஸ்ரீ ஆஞ்சநேய வழிபாட்டில் ஏற்பட்ட எழுச்சியின் விளைவாக ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு என்று தனிக்கோயில்கள் நிறுவப்பட்டது. ஏற்கனவே உள்ள கோயில்களுக்குள் தனி சன்னதிகள் சேர்க்கப்ப்ட்டன.

ஸ்ரீபாதராஜ மடம் - முல்பாகல் மடம்

ஸ்ரீபாதராஜ மடம், ஈரோடு கர்நாடகாவின் தற்போதைய கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ள முல்பாகல், துவைத சித்தாந்ததின் ஆய்வுக்கான மையமாக புகழ் பெற்றது. பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவி ஸ்ரீபாதராஜர், முல்பாகலில் துவைத தத்துவத்திற்கான பயிற்சி மையம் ஒன்றினை நிறுவினார். இது ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனமாக உருவானது. இந்த புகழ்பெற்ற தத்துவஞானியின் சீடரான ஸ்ரீ வியாசராஜா, இந்த மரபை மேலும் வளப்படுத்தினார்.

ஸ்ரீ ஸ்ரீபாதராஜர் மற்றும் முல்பாகலின் முக்கியத்துவத்தைப் பற்றிய தகவலுக்கு ‘ஸ்ரீபாதராஜ மடம், நரசிம்ம தீர்த்தம், முல்பாகல், கோலார், கர்நாடகா.’ என்ற எங்கள் பக்கத்தைப் பார்க்கவும்.

ஸ்ரீபாதராஜ மடம், ஈரோடு

கணிசமான பின்பற்றுபவர்கள் இருந்த ஸ்ரீபாதராஜ மடம், துவைத தத்துவத்தை தீவிரமாகப் பரப்புவதற்காக பல்வேறு இடங்களுக்குச் சென்றது. பதினேழாம் நூற்றாண்டில், மடத்தின் பரம்பரையில் பதினாறாவது குருவான ஸ்ரீ ஸ்ரீ லட்சுமி மனோகர தீர்த்தர், தென்னிந்தியாவில் விரிவாக சுற்றுப்பயணம் செய்து, 'த்வைத' போதனைகளைப் பரப்பினார். ஈரோட்டுக்கு அருகிலுள்ள ஓடப்பள்ளி கிராமத்திற்கு வந்த துறவி, அதன் அழகில் மயங்கி, அங்கு ஒரு பயிற்சி மையத்தை நிறுவ முடிவு செய்தார், பின்னர் அது ஓடப்பள்ளி மடம் என்று அழைக்கப்பட்டது.

ஸ்வாமிஜி ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி சிலையை நிறுவி, ஒரு பயிற்சி மையத்தைத் திறந்து வைத்தார். ஒரு சிற்பி பல ஆண்டுகளுக்கு முன்பு தனது மூதாதையர்களால் செதுக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு சிலையை சுவாமிஜிக்கு வழங்கியபோது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் வெளிப்பட்டது. ஆச்சரியப்படும் விதமாக, அது ஸ்ரீ அனந்த தீர்த்தரின் (ஸ்ரீ மத்வாச்சாரியார்) சிலையாக இருந்தது, சுவாமிஜி தான் பெற்ற ஆசீர்வாதத்தில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

ஓடப்பள்ளியில் பெரும்பாலும் வசித்து வந்தபோது, ​​சுவாமிஜீயை பின்பற்றுபவர்கள் ஈரோடு முழுவதும் கணிசமான இருந்தனர். காவேரி ஆற்றின் மேற்குக் கரையைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமிஜீ தங்கள் பகுதியிலும் அவரது கல்வி நடவடிக்கைகளை நடத்த வேண்டும் என்ற நல் எண்ணத்தில், ராத்திரி சத்திரம் அருகே மரபாளையத்தில் நிலம் வாங்கி மடம் கட்டினார்கள்.

மாரப்பாளையத்தில் உள்ள ஆஞ்சநேய கோயில்

மாரப்பாளையத்தில் வழங்கப்பட்ட நிலத்தில், சுவாமிஜி ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி சிலையை நிறுவி, ஒரு கற்றல் மையத்தைத் திறந்து வைத்தார். அங்கு, ஒரு சிற்பி பல ஆண்டுகளுக்கு முன்பு தனது மூதாதையர்களால் செதுக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு சிலையை சுவாமிஜிக்கு வழங்கியபோது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் வெளிப்பட்டது. ஆச்சரியப்படும் விதமாக, அது ஸ்ரீ அனந்த தீர்த்தரின் (ஸ்ரீ மத்வாச்சாரியார்) சிலையாக இருந்தது, சுவாமிஜி இதனை தான் பெற்ற ஆசீர்வாதமாக கருதி மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

ஸ்ரீ அனந்த தீர்த்தரின் சிலை ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு அருகில் வைக்கப்பட்டு, வழக்கமான வழிபாட்டு சடங்குகள் நடக்கத் தொடங்கின.

நவ பிருந்தாவனம், ஈரோடு

நவ பிருந்தாவனம், ஈரோடு பல சீடர்களுக்கு அறிவொளி அளித்து, ஈரோட்டில் இரண்டு கற்றல் மையங்களை நிறுவிய பிறகு, ஸ்ரீ ஸ்ரீ லட்சுமி மனோகர தீர்த்தர் பிருந்தாவனத்திற்குள் நுழைந்தார். பள்ளிப்பாளையம் அருகே காவேரி ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள அவரது பிருந்தாவனம், இப்போது 'நவ பிருந்தாவனம்' என்று அழைக்கப்படுகிறது, இது ஸ்ரீபாதராஜ மடத்தைச் சேர்ந்த மற்ற எட்டு துறவிகளின் புனித பிருந்தாவனங்களைக் கொண்டுள்ளது இந்த க்ஷேத்திரம். காவேரி கரையில் புனிதமான துறவிகளின் ஒன்பது பிருந்தாவனங்களைக் காண்பது ஒரு அற்புதமான காட்சி.

நவ பிருந்தாவனத்திற்குச் சென்ற ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி

ஸ்ரீ லட்சுமி மனோகர தீர்த்தர் தங்கியிருக்கும் நவ பிருந்தாவனத்திற்கு, மாரப்பாளையத்திலிருந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி மற்றும் ஸ்ரீ அனந்த தீர்த்த விக்ரஹங்கள் மாற்றப்பட்டன. அருகே ஸ்ரீ பிரசன்ன லட்சுமி நரசிம்ஹரின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

ஸ்ரீ ராகவேந்திர மிருத்திகா பிருந்தாவனம்

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி,நவ பிருந்தாவனம், ஈரோடு ஸ்ரீ லட்சுமி மனோகர தீர்த்தர் தங்கியிருந்த மரப்பாளையம் தளத்தில், இன்று ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் மிருத்திகா பிருந்தாவனம் நிறுவப்பட்டுள்ளது. அருகில் இருக்கும் ஸ்ரீ ஸ்ரீபாதராஜ மடத்தின் கற்றல் மையம் செயல்பட்டு வருகிறது.

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி

ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் சிலை முழு விக்ரஹத்தில் செதுக்கப்பட்டுள்ளது. அஞ்சலி தோரணையில் அழகாக நிற்கிற பிரபு, மணிக்கட்டில் கங்கணம் மற்றும் மேல் கையில் கேயூரம் ஆகியவற்றின் விரிவான அலங்காரங்களுடன் காணப்படுகிறார். 'புஜ வளையம்' என்று அழைக்கப்படும் ஒரு அலங்காரம் அவரது வலுவான தோள்களை மூடுகிறது. தாமரை பாதங்கள், கணுக்கால்களில் தண்டை மற்றும் நுபூரம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. முழங்காலுக்கு அருகில் பெரிய மாலை போன்ற அலங்காரமும் காணப்படுகிறது. அனைத்து அலங்காரங்களும் உடையும் நேர்த்தியான் கைவினைத்திறனைக் காட்டுகின்றன.

கனிந்த கன்னங்களும் மற்றும் நீண்ட காதும் அவரது கவர்ச்சியை அதிகரிக்கிறது. அவரது காதுகளில் நீண்ட காது தொங்கட்டான்கள் காணப்படுகிறது. ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் புனித வடிவில் இருந்து வெளிப்படும் தெய்வீக அருளை பக்தர்கள் உணர முடியும்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "நவ பிருந்தாவனம், ஈரோடு"

 

அனுபவம்
காலை நேரத்தில் அமைதியான சூழலை அளிக்கும் காவேரி நதியின் அருகே அமைந்துள்ள நவ பிருந்தாவனத்திற்குச் சென்றால், பக்தர்களுக்கு அமைதியை வழங்குகிறது. உயரிய துறவிகளால் பூஜிக்கப்பட்ட இறைவனின் உருவங்கள் முன்னிலையில் அமைதியாக அமர்ந்திருப்பது, வரவிருக்கும் காலங்களில் மறக்க முடியாத அனுபவமாக - நீடிக்கும் ஒரு உள் அமைதியைத் தூண்டும் என்பது திண்ணம்.       

தமிழாக்கம் : திரு. ::
பதிப்பு:  ஜூன் 2025


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+