home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ முக்கியப் பிராணா, வியாசராஜ மடம், சேலம், தமிழ்நாடு

ஸ்ரீ ஹரி சுந்தர்

வியாச தீர்த்தர் வியாசராஜ தீர்த்தராக ஆன காட்சி

சேலம் நகரம்

தமிழ்நாட்டின் பிரபலமான நகரங்களில் சேலம் நகரம் முக்கியமான ஒன்றாகும். சேலம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரோமானியர்களுடன் வர்த்தக தொடர்புகளைக் கொண்டிருந்த ஒரு பழமையான இடம். எந்தவொரு ஆரம்பகால நாகரிகக் குடியேற்றமும் ஒரு நதிக்கரையில் ஆரம்பிக்கிறது. பின் அதுவே நவீன கால நகரமாக வளர்ச்சிக் காண்கிறது. சேலம் இதற்கு விதிவிலக்கில்லை, இந்த நகரம் திருமணிமுத்துாறு நதிக்கரையில் நிறுவப்பட்டது.

சேரலம் என்பது சேலம் ஆனது என்பதற்கு ஏத்தாப்பூர் செப்பேட்டில் உள்ள "சாலிய சேரமண்டலம்" என்ற தொடரை ஆதாரமாகக் கூறுவர். இந்த நகரம் எந்த மலைகளால் சூழப்பட்டுள்ளது - சைலம் என்ற சொல்லிற்கு மலைகளால் சூழ்ந்த வாழிடம் என்பது பொருள். இதனால் சைலம் என்பதே திரிந்து சேலம் ஆனது என்றும் கூறுவர்.

சேலம் ஆட்சியாளர்கள்

சேலம், ஸ்ரீ வியாச மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ முக்கியப் பிராணா மற்றும் ஸ்ரீ சத்ய நாராயண சுவாமி இவ்விடம் பல்வேறு ஆட்சியாளர்களின் கீழ், முந்தைய காலத்தில் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையில் மாறிக்கொண்டிருந்தது. பின்னர் சோழர்கள், கலை கட்டிடக்கலை மற்றும் ஆன்மீகத்திற்கு பங்களிப்பு செய்தவர்களாக அறியப்படும் ஹொய்சலர்கள் சோழர்களைத் தொடர்ந்து வந்தனர். பின்னர் மதுரை நாயக்கர்கள் உருவாக்கிய பாளையக்காரர் முறையால் இப்பகுதி விஜயநகரப் பேரரசின் கீழ் வந்தது.

பின்னர் இந்த இடம் மைசூர் ஆட்சியாளர் திப்பு சுல்தானின் கீழ் வந்தது, அதைத் தொடர்ந்து நாம் சுதந்திரம் பெறும் வரை ஆங்கிலேயர்களும் ஆட்சி செய்தனர்.

கோட்டைப் பகுதி

கோட்டைப் பகுதியிலுள்ள சுகவனேசுவரர் கோயில் ஏழாம் நூற்றாண்டை சார்ந்தது என்பர். பின்னர் ஹொய்சலர்கள் மற்றும் விஜயநகரக் காலத்தில் சேலத்தில் பல கோயில்கள் எழுப்பட்டன, இவர்கள் காலத்தில் சேலம் ஒரு கோட்டை நகரமாக இருந்தது. இதனால் அப்போதைய கோட்டைப் பகுதி மிகப் பழமையான பகுதியாகக் கருதப்படுகிறது, இப்போது அது 'கோட்டைப் பகுதி' என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் பல பழைய கோயில்கள் மற்றும் மத நிறுவனங்கள் உள்ளன, பொதுவாக கோயில்கள் தங்கள் பெயரில் 'கோட்டை' முன்னொட்டு இருக்கும், இது கோட்டைப் பகுதியில் அமைந்துள்ளது என்பதைக் குறிக்கிறது.

கோட்டை மாரியம்மன் கோயில், அழகிரிநாதர் கோயில் அல்லது 'கோட்டை பெருமாள் கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் 'கோட்டை ஈஸ்வரன் கோயில்' என்றும் பிரபலமாக அழைக்கப்படும் மேட்டு அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுகுவனேஸ்வரர் கோயில் ஆகியவை குறிப்பிட வேண்டிய சில கோயில்கள்.

வியாசராஜ மடம் சேலத்தில் ஒரு கிளையை நிறுவிய காலத்தில், ஸ்ரீ முக்யபிராணா விக்ரகம் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாதவ மரபின்படி ஸ்ரீ முக்யபிராணா முதல் தெய்வமாக பூஜை செய்யப்படுகிறார். வியாச மடம் இங்கு எப்போது உருவானது என்பது தெரியவில்லை, ஆனால் இது நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே இருந்ததாக எளிதாகக் கூறலாம்.

கோட்டை பகுதி நகரத்தின் மிகவும் மக்கள் தொகை கொண்ட மற்றும் பரபரப்பான பகுதியாகும். இன்று இந்தப் பகுதியில் முதல் அக்ரஹாரம், இரண்டாவது அக்ரஹாரம், மேட்டு அக்ரஹாரம் போன்ற பெயர்கள் உள்ளன. இது ஒரு காலத்தில் இந்தப் பகுதி ஆன்மீக நடவடிக்கைகளால் செழித்து வளர்ந்திருந்ததைக் குறிக்கிறது. அந்த காலத்தில் இது சமூக மற்றும் கலாச்சார ஆர்வத்தால் துடிப்பானதாக இருந்துள்ளது. பிற்காலத்தில் இந்தப் பகுதியில் பல தெய்வ சிலைகள் பூமிக்கடியுலிருந்து கிடைத்துள்ளன. இதனால் இந்தப் பகுதி இடைகாலத்தில் நிறைய அழிவு மற்றும் சேதத்திற்கு ஆளானது என்ற நம்பிக்கை வலுக்கிறது. அந்தக் காலத்தின் பேரழிவுகளில் இருந்து தப்பிய சனாதன தர்மத்தின் சில மடங்களும் இங்கே உள்ளன.

ஸ்ரீ வியாசராஜ மடம்

சேலம் ஸ்ரீ வியாச மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ மத்வாச்சாரியார் மற்றும் ஸ்ரீ வியாசராஜா ஸ்ரீ மத்வாச்சாரியாரின் சீடர்கள் மத்வ த்வைத சித்தாந்தத்தைப் பரப்பினர். அவர்களின் முயற்சிகள் இன்றைய தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியான கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி போன்ற இடங்களில் இதன் சுவடுகளைக் காண முடிகிறது. ஸ்ரீ மத்வாச்சாரியாரின் சீடர்களின் முக்கிய தெய்வம் ஸ்ரீ ஆஞ்சநேயர், அவரை அவர்கள் 'ஸ்ரீ முக்யபிராணா' என்று வணங்குகிறார்கள். த்வைத மடங்களின் நடைமுறையைப்படி, அவர்கள் ஒரு கிளையை [த்வைத பயிற்சி மையம்] நிறுவிய இடமெல்லாம் முதல் தெய்வமாக ஸ்ரீ முக்யபிராணாவை நிறுவினர்.

ஸ்ரீ மத்வாசாரியாவின் த்வைத தத்துவத்தைப் பின்பற்றுபவர் ஸ்ரீ வியாசராஜர் [1460 – 1539]. இவர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் ராஜ குரு என்பது பலரும் அறிந்ததே. அவர் ஸ்ரீ முக்யபிராணாவின் 732 கோயில்களை நிறுவியதற்காகவும் அறியப்படுகிறார்.

அவரது சுறுக்கமான வாழ்க்கை வரலாற்றைப் பற்றி மேலும் அறிய எங்கள் ஆங்கில வலைதளத்தில் வியாசராஜ தீர்த்தர் பக்கத்தை படிக்கவும்.

இவ்வாறு வியாசராஜ மடம் சேலத்தில் ஒரு கிளையை நிறுவிய காலத்தில், ஸ்ரீ முக்யபிராணா விக்ரகம் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாதவ மரபின்படி ஸ்ரீ முக்யபிராணா முதல் தெய்வமாக பூஜை செய்யப்படுகிறார். வியாச மடம் இங்கு எப்போது உருவானது என்பது தெரியவில்லை, ஆனால் இது நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே இருந்ததாக எளிதாகக் கூறலாம்.

இன்றய வியாச மடம்

முதல் அக்ரஹாரம் சாலையின் வடக்குப் பகுதியில் இம்மடம் அமைந்துள்ளது. மடத்தின் பின்புறத்தில் திருமணிமுத்துஆறு உள்ளது. சாலையே ஒரு பரபரப்பான ஷாப்பிங் பகுதி. மடத்தின் நுழைவாயில் கடைகள் மற்றும் ஷோரூம்களுக்கு இடையில் அமைந்துள்ளது. மடத்திற்குள் நுழைந்தவுடன், மடத்தின் வளாகம் எவ்வளவு விசாலமானது என்பதை ஒருவர் அறிந்து கொள்ளலாம்.

சேலத்தில் உள்ள ஸ்ரீ வியாச மடத்தில் உள்ள கர்ப்பகிரஹங்கள் இடதுபுறம் நுழைந்தால் கிழக்கு நோக்கிய கர்ப்பகிரகங்கள் உள்ளன. பின்னர் மடத்தின் அலுவலகம், நவகிரகங்கள், பிரார்த்தனை மண்டபம், சமையலறை மற்றும் கல்யாண மண்டபம் வருகிறது. அதன் பிறகு முதல் தளத்தில் வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கு சில அறைகள் உள்ளன.

கர்ப்பக்கிரஹங்கள்

முதன் முதலில் ஆரம்ப காலத்தில் ஸ்ரீ முக்யபிராணர் சந்நிதியும் ஸ்ரீ சத்தியநாராயண ஸ்வாமி சந்நிதியும் இருந்தது. அன்று நிறுவிய சந்நிதி இப்போது அதே இடத்தில் புதுப்பிக்கப்பட்டது.

தற்போது, ஸ்ரீ முக்யபிராணாவின் சந்நிதியின் இருபுறமும் மேலும் இரண்டு சந்நிதிகள் எழுப்ப பட்டுள்ளது. முதலாவதாக ஸ்ரீ ராகவேந்திரர் ஸ்வாமிகளின் மிருத்திகா பிருந்தாவன சந்நிதி, இரண்டாவதாக ஸ்ரீ ஜெய தீர்த்தரின் மிருத்திகா பிருந்தாவனமும் ஸ்ரீ வியாசராஜரின் மிருத்திகா பிருந்தாவனமும் இருக்கும் சந்நிதி.

ஸ்ரீ வியாசராஜ மடத்தின் 37வது பீடாதிபதி ஸ்ரீ வித்யா பிரஸ்ஸன்ன தீர்த்தர் [1940 - 1969] 1973 ஆம் ஆண்டு ஸ்ரீ வியாசராஜரின் மிருத்திகா பிருந்தாவனம் நிறுவினார்.

ஸ்ரீ முக்யபிராணர், ஸ்ரீ வியாச மடம், சேலம் ஸ்ரீ வியாசராஜ மடத்தின் 38வது பீடாதிபதியான ஸ்ரீ வித்யாபயோநிதி தீர்த்தர் 1985 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜய தீர்த்தரின் மிருத்திகா பிருந்தாவனம், ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மிருத்திகா பிருந்தாவனம் மற்றும் நவக்கிரகம் ஆகியவற்றை நிறுவினார்.

ஸ்ரீ முக்யபிராணா

கருங்கல்லால் செய்யப்பட்ட இறைவனின் சிலை, கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் சுமார் நான்கு அடி உயரத்தில் உள்ளது.

இறைவன் வடக்கு நோக்கி நடக்கத் தயாராக இருக்கிறார். இறைவனின் தாமரை பாதங்களில் தண்டை மற்றும் நூபூரம் காணப்படுகிறது. அவர் கச்சம் வைத்து வேட்டி அணிந்துள்ளார், இடுப்பில் ஒரு அலங்கார இடுப்பு பட்டையுடன் [உத்ரபந்தா] காணப்படுகிறார். மேல்புஜத்தில் கேயூரமும், மணிக்கட்டில் கங்கணமும் காணப்படுகிறது. பிரபு வலது கையை உயர்த்தி அபய முத்திரை காட்டுகிறார். இடது கை இடது தொடையில் வைத்துள்ளார், சௌகந்திகா மலரின் தண்டைப் பிடித்திருக்கிறார். பிரபுவின் இடது தோளுக்கு சற்று மேலே அம்மலர் காணப்படுகிறது. மார்பில் ஜெபமாலைகள், முப்புரி நூல் காணப்படுகின்றது. காதுகளில் குண்டலம் அணிந்துள்ளார். பிரபுவின் வால் தலை வரை உயர்ந்து, இறுதியில் சிறிய மணியுடன் காணப்படுகிறது. அவரது தலைக்கவசம் சிறிய கிரீடமாக தெரிகின்றது. பிரபு தனது பிரகாசமான கண்களால் பக்தர்களை நேராக பார்க்கிறார், இறைவனின் கடாக்ஷம் நேரடியாக பக்தன் மீது விழுவது விசேடமே.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "வியாசராஜ மடம், சேலம்"

 

அனுபவம்
மனதிற்கு ஆறுதல் அளிக்கும் அமைதியான சூழல், இந்த க்ஷேத்திரத்தின் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது, நமது இலக்கை அடைய நம்மை நேர்மையான பாதையில் அழைத்துச் செல்லும்.       

தமிழாக்கம் : திரு. :: பதிப்பு:  ஏப்ரல் 2025


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+